சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 11 போலீசார் உயிரிழந்துள்ளனர். பாஸ்டர் என்ற இடத்தில் காவலர்கள் சென்ற வாகனம் மீது நக்சலைட் கும்பல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே 11 பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.