ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடையின் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரேஷன் கடைகளில் ‘முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் இலவச ரேஷன் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அரிசி, கோதுமை, தினை ஆகியவை முதலில் வருபவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். தாமதமாக வருபவர்களுக்கு அரிசி மற்றும் கோதுமை மட்டுமே வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் 13ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை ரேஷன் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.