தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால் நேற்று சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

கனமழை காரணமாக மாணவர்களின் நலனை கருதி சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ள மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றும் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல இன்றைய செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.