பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திருச்சி மாவட்டத்திற்கு வந்தடைந்துள்ளார். பிரதமர் மோடி அவர்களை வரவேற்க தமிழக ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய விமான நிலையத்திற்கு வருகை புரிந்துள்ளனர். சற்று நேரத்தில் மோடி அவர்கள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சி – கல்லாகம் இடையேயான நான்கு வழி சாலை, செட்டிகுளம் – நத்தம் இடையேயான நான்கு வழி சாலை, காரைக்குடி – ராமநாதபுரம் இடையேயான 2 வழி சாலை, திருச்சி – விருதுநகர், விருதுநகர் – தென்காசி இடையேயான மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகள் உள்ளிட்ட 19,850 கோடி ரூபாய் மதிப்பில்லான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தமிழ்நாட்டில் தொடங்கி வைக்க இருக்கிறார்.