கடந்த சனிக்கிழமை கிளாம்பாக்கத்தில் 393 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்டது. கிளாம்பாக்கத்தில் இருந்து 15 ஆம் தேதி முதல் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் பேருந்துகளில் ரூ.20 முதல் ரூ.30 வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.