பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார்.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. திருச்சி விமான நிலையம் வந்த பிரதமரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர். மேலும் பிரதமர் மோடியை அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் வரவேற்றனர்.

19 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. திருச்சி விமான நிலைய புதிய முனையம் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி. பிரதமர் மோடியின் வருகையை ஓட்டி திருச்சியில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருச்சி வந்த பிரதமர் மோடிக்கு வழிநெடுகிளும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக சென்ற மோடிக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. வழிநெடுகிளும் மலர் தூவி வரவேற்ற பாஜக தொண்டர்களை பார்த்து பிரதமர் நரேந்திர மோடி கையசைத்தார். பிரதமர் மோடியை வரவேற்க வழிநெடுகிளும் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் திருச்சி வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க பல இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாரதிதாசன் 38வது பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 1528 மாணவர்களுக்கு பிரதமர் பட்டங்களை வழங்குகிறார்