திமுகவுடன் கூட்டணிப் பேச்சு நடத்த மக்கள் நீதி மய்ய குழு இன்று அண்ணா அறிவாலயம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு கட்சி குழுவினரும் காலை 10.30 மணிக்கு ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் நீதி மய்யப் பொதுச் செயலாளர் அருணாச்சலம் தலைமையிலான கூட்டணி பேச்சுவார்த்தை குழு திமுக குழுவை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கமல்ஹாசனும் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.