மதிமுகவின் முதன்மை செயலாளராக துரை வைகோ மீண்டும் தேர்வு செய்யப்படவுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. வயது முதிர்வு, உடல்நிலை பாதிப்பு காரணமாக அரசியலில் வைகோவால் ஆக்டிவாக செயல்பட முடியவில்லை. இதனால், கட்சியின் பல முக்கிய அதிகாரங்கள் துரை வைகோவிற்கு வழங்கப்படவுள்ளது. இதன்மூலம் உதயநிதிக்கு போட்டியாக திராவிட அரசியலில் அடுத்த வாரிசு தலைவராக துரை உருவெடுத்துள்ளார்.