தருமபுரி, கிருஷ்ணாபுரத்தில் 6 வயது சிறுவனை, உறவினரே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீர்த்தேக்க தொட்டிக்குள் கட்டிவைத்து பாலியல் வன்கொடுமை செய்தபோது, சிறுவன் சத்தமிட்டதால், கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான் பிரகாஷ் என்ற காமக்கொடூரன். அவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.