அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி எம்.பி ஆஜராகியுள்ளார். 2வது நாளாக இன்று ஆஜராக அமலாக்கத்துறையினர் கவுதம சிகாமணிக்கு சம்மன் வழங்கியிருந்த நிலையில், நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். நேற்று மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று மீண்டும் விசாரணை தொடர்கிறது.