2024ல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு என்ற மாநிலமோ, சட்டமன்றமோ, முதல்வரோ, அமைச்சரோ எதுவும் இருக்காது என திருச்சியில் நடந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலும் வரும் என பேச்சு அடிப்படும் நிலையில், அதை உறுதி செய்யும் வகையில் முதல்வர் பேச்சு அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.