முத்துப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவானது. திருத்துறைப்பூண்டி,
மன்னார்குடிக்கு மக்கள் பல கி.மீ., தூரம் சென்று வந்த நிலையில், முத்துப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு வருவாய் வட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தம் தாலுக்காக்களின் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது. முதல்வருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.