கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆக. 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இந்த போராட்டத்தில் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள அவர், ஆட்சிக்கு வந்த 90 நாட்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின், தற்போதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என எ குற்றம் சாட்டினார்.