தமிழகத்திற்கு வர வேண்டிய அளவு தண்ணீர் கர்நாடகவில் இருந்து வழங்கப்படவில்லை. ஏனென்றால்அணையில் உள்ளநீர்களில் அவர்களுக்கு இருக்கும் நீர் இருப்பே குறைவாக தான் இருக்கின்றது என்ற வாதம் கர்நாடகம் தரப்பில் காவிரி ஒழுங்காற்று குழு முன் வைக்கப்பட்டது.

தமிழகமும் தனது தரப்பு வாதங்களை எடுத்து வைத்த நிலையில் தற்போது டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு நீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி நீர்வீதம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஆணையம்  ஆணை பிறப்பித்துள்ளது.