டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகள், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. இதில் தற்போது பிற்பகல் 12 முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் செயல்படும் நிலையில், விற்பனை நேரத்தை மாற்றுவது குறித்தும், வாடிக்கையாளர்களுக்கு கணினி வழி ரசீது வழங்குவது, கூடுதலாக ரூ. 10 வாங்குவதை தடுப்பது குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.