தமிழகத்தில் கிராம சபை கூட்டங்களை முதல்வர் ஸ்டாலின் காணொளி குறும்பட உரையின் மூலம் சற்று முன் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 12525 கிராமங்களில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் பருவமழை முன்னேற்பாடு, டெங்கு தடுப்பு நடவடிக்கை, மழைநீர் சேகரிப்பு மற்றும் உள்ளூர் மக்களின் தேவை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகின்றது. இதில் மக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.