தமிழகத்தில் மதுவிலக்கு அமலாக்க பணியில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் விருது வழங்கப்படும் என்ற தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் ஐந்து பேருக்கும் விருதுடன் சேர்த்து 40,000 ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட உள்ளது.

காவல் கண்காணிப்பாளர் கோ.சசாங்சாய், காவல் துணை கண்காணிப்பாளர் ப.காசிவிஸ்வநாதன், காவல் ஆய்வாளர் கா.மு.முனியசாமி, காவல் உதவி ஆய்வாளர் அ.பாண்டியன், தலைமை காவலர் ஜெ.ரங்கநாதன் ஆகிய 5 பேருக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.