தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், மகளிர் சுய உதவி குழுக்களை உருவாக்கி அதற்கு உயிரோட்டம் தந்தவர் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள்.

தற்போது முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். பெண்கள் பிறர் கையை எதிர்பாராமல் சொந்த காலில் நிற்கத்தான் கடனுதவி வழங்கப்படுகின்றது. தகுதி இருந்தும் மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள் மறுபடியும் பதிவு செய்தால் கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.