தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எட்டியார் குப்பத்தை சேர்ந்த ஆறு பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வெள்ளிக்கிழமை இருவர் உயிரிழந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை ஒரு தம்பதி உயிரிழந்தனர். தற்போது 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் நலமாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட 10 பேரும் எத்தனால் மற்றும் எத்தனால் கலந்த கல்ல சாராயத்தை அருந்தி இருக்கலாம் என்றும் இது தொடர்பாக அமரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கள்ளச்சாராய விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுமாறு போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மேலும் கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வனப்பகுதியில் கண்காணிப்பை தீவிர படுத்தவும் மரக்காணம் சாராயத்தில் கலக்கப்பட்ட கெமிக்கல் குறித்து ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.