தமிழகம் முழுவதும் குட்கா பொருட்கள் மீதான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. புகையிலை சார்ந்த உணவுப் பொருட்கள் மீதான தடையை 2013ஆம் ஆண்டு தமிழக அரசு அமல்படுத்தியது. கடந்த 2 ஆண்டுகளில் *12.56 கோடி மதிப்பிலான 191.1 டன் குட்கா பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான புகார்களை 9444042322 என்ற வாட்ஸாப் எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.