தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை வென்ற போதிலும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆளுநர் பதவி ஏற்பு செய்து வைக்காமல் காலதாமதம் செய்து வருகிறார். இதற்கு தற்போது பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக திமுக மற்றும் அதிமுக இணைந்து கூட்டணி அமைக்க போவதாக ஒரு செய்திகள் பரவியது.
இந்த நிலையில் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக திமுக கட்சியின் தலைவர் முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆணையும் பிறப்பித்து விட்டார். இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி!
இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
