தமிழகத்தையே உலுக்கிய பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் பல வருடங்களாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. ஆயுள் தண்டனையை எதிர்த்து முக்கிய குற்றவாளியான யுவராஜ் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் சுவாதி பிறழ்சாட்சியாக மாறிய நிலையில் இந்த தீர்ப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த வழக்கில் 10 பேருக்கும் தண்டனை உறுதி செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில மணி நேரத்தில் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வெளியாக உள்ளது.