தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடைவிடுமுறை விடப்பட்டது. மாணவர்களும் மகிழ்ச்சியாக கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தகுந்த சுகாதார மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்க அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோல், 6-18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கவும், 10, 12ம் வகுப்பு இறுதி தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களை இனம் கண்டு அவர்களுக்கும் தேவையான உதவிகளையும் சிறப்புப் பயிற்சிகளையும் வழங்க உத்தரவிட்டுள்ளது.