தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேசமயம் மக்களின் வசதிக்காக பல புதிய திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தமிழகம் முழுவதும் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் நேற்று முதல் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு வியாபாரிகள் நெல் கொடுப்பதை தவிர்க்கவே இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் பயோமெட்ரிக் முறையில் நெல் கொள்முதல் செய்வதன் மூலம் அதிக அளவிலான விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.