முன்னாள் அமைச்சர் பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதியை காலி என்று சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து இந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. ஏற்கனவே ராஜினாமா செய்த விஜயதாரணியின் விளவங்கோடு தொகுதியும் காலியாக இருப்பதால் இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.