6-12ம் வகுப்புக்கு ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்புக்கு ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். விடுமுறை நாளில் பெற்றோர் குழந்தைகளை அருகிலுள்ள நூலகத்திற்கு அழைத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்திய அவர், விடுமுறை நாட்களில் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என்று மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.