தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முழுவதுமே வார இறுதி நாட்களில் தொடர்ந்து விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டுவார இறுதி நாட்களில் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டதால் பலரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்பினர். தற்போது தமிழகத்தில் நாளை முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

நாளை மற்றும் நாளை மறுநாள் சனி ஞாயிறு கிழமைகள், திங்கட்கிழமை மே 1ம் தேதி பொது விடுமுறை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்ல பேருந்து மற்றும் ரயில்களில் டிக்கெட் புக்கிங் செய்து வருகின்றனர். நீங்களும் விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.