ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் கொண்டேபாடு கிராமத்தில் டிராக்டர் கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 22 பேரை ஏற்றிச் சென்ற டிராக்டர் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்த நிலையில் 5 பேர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.