புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கே. ராயவரத்தில் மஞ்சுவிரட்டில் காளை முட்டி கணேசன் (58) என்பவர் உயிரிழந்துள்ளார். நேற்று பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் அரவிந்த்ராஜ்  என்பவர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் குளித்தலை ஆர்டி மலையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் பள்ளிப்பட்டியைச் சேர்ந்த இளைஞர் சிவக்குமாரின் வலது கண் வெளியே வந்து பார்வை பறிபோனது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.