செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கில் 900 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். 2011ல் செந்தில்பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அரசு அதிகாரிகள், போக்குவரத்து ஊழியர்கள் என 900 பேரை குற்றவாளிகளாக காவல்துறை சேர்த்துள்ளது. வழக்கை நடத்துவதற்கான அனுமதி அரசிடம் இருந்து கிடைக்கவில்லை எனவும் காவல்துறை தரப்பு ஐகோர்ட்டில் கூறியுள்ளது.