தமிழகத்தில் நாளை தேனி, நீலகிரி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது. ஜன. 5ஆம் தேதி நீலகிரியிலும், 7ஆம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் கனமழை வெளுக்கும். தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் நிலவும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.