சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைதாகி செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுகிறது. செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணை விரைவில் வரவுள்ள நிலையில், ஐ.டி. சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது, செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் பங்களா, கொங்கு மெஸ் மணியின் பண்ணை வீடு, ஓட்டல் உள்ளிட்ட பல இடங்களில் அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்கின்றனர்.