தமிழகத்தில் கடல் வளத்தை பாதுகாக்க ₹2000 கோடியில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடல் பல்லுயிரிகளை பாதுகாப்பது உள்ளிட்ட அம்சங்களுடன் உலக வங்கியின் நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லுயிரி பாதுகாப்பு பூங்கா, கடல் ஆமை பாதுகாப்பு மையம், சதுப்பு நில பாதுகாப்பு மையம் ஆகியவை இத்திட்டத்தின் மூலம் அமைக்கப்படவுள்ளன.