அதிமுக சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய வழக்கில், ஓபிஎஸ்-க்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடையை நீக்க முடியாது எனக் கூறி, ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த தீர்ப்பு மூலம், இனி அவரால் அதிமுக பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த முடியாது.