சேலம் பெரியார் பல்கலை.,யில் ஒருபுறம் போலீசார் சோதனை, மறுபுறம் ஆளுநருக்கு எதிராக மாணவர்கள் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படுவதால் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆளுநரே திரும்பிப் போ.. திரும்பிப் போ.. என முழக்கங்களை எழுப்பி வரும் மாணவர்கள், “முறைகேடு புகாரில் கைதாகி ஜாமினில் உள்ள துணைவேந்தருக்கு ஆளுநர் ஆதரவாக இருப்பதாகவும், துணைவேந்தரை உடனே சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.