டெல்லியில் ஜன.13ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அனைத்து கட்சி MPக்கள் குழு சந்திக்கிறது. சென்னை, தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கான நிவாரண நிதி கோரி அரசு சார்பில் 2 மனுக்கள் அளித்தும் மத்திய அரசிடமிருந்த இதுவரை நிதி வரவில்லை. இதனால் மொத்தமாக ₹37,907 கோடி நிதியை உடனே வழங்குமாறு நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளனர். இதற்காக நாளை மறுநாள் 3.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.