ஏமன் நாட்டின் சனா விமான நிலையத்தின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். செங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்களை ஹவுதி தீவிரவாதிகள் தொடர்ந்து வழிமறித்து கடத்துவதாக புகார் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு இந்தியக் கப்பல்களை கூட அவர்கள் கடத்தியிருந்தனர். இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் ஏமன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு 10க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.