சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ஒரு மாதத்தில் சரணடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு எதிராக அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவியாகிய இருவரும் சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.