ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி இடைக்கால தீர்ப்பு அளிக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பு உச்சநீதி மன்றத்தில் முறையிட்டது. தமிழ்நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் இந்த வழக்கு இன்னும் சற்று நேரத்தில் காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு அடிப்படையில் பாஜகவின் ஆதரவு யாருக்கு என்பது தெரிய வரும்.