ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்தும் இடைநிலை ஆசிரியர்கள் தமிழகம்  முழுவதும் இன்று போராட்டம் அறிவித்துள்ளனர். இதனிடையே போராடும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் போராட்டத்தை கைவிடாவிட்டால் இறுதி கட்டமாக பணிநீக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.