தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20-ம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதேசமயம் முக்கிய தீர்மானங்களும் புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 3 நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் சட்டப்பேரவையில் அனைத்து கதவுகளை மூட சபாநாயகர் அப்பாவு உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து ஆளுநருக்கு எதிராகவும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை நிலைநாட்டும் வகையிலும் தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதிமுக வெளிநடப்பு செய்த நிலையில் தனி தீர்மானம் தொடர்பாக குரல் வாக்கெடுப்பு நடந்து வருகிறது.