தென்னாப்பிரிக்காவில் பாலத்தை உடைத்துக் கொண்டு பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டரை கொண்டாடுவதற்காக போட்ஸ்வானாவில் இருந்து மொரியா சென்ற பேருந்து, பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் 45 பேரும் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.