தமிழகத்தில்  7,301 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற குரூப் 4 தேர்வை மொத்தம் 18 லட்சத்து 36 ஆயிரத்து 535 பேர் எழுதினர். தேர்வு முடிந்து கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் முடிந்த நிலையில் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி சமூக ஊடகங்களில் கருத்துக்களும் வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில்  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இல் இருந்த காலி பணியிடங்கள் 7,381 இல் இருந்து 10,117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வுகளில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.