டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வின் இறுதி விடைத்தாளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. அப்போது தேர்வு எழுதியவர்கள் இந்த தேர்வில் குழப்பமும் மோசடியும் நடந்திருப்பதாக கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதனை விசாரித்த நீதிபதி இறுதி விடைத்தாளை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.