தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ள பாமக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.

அதில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் 3000 ரூபாய், பிறந்த குழந்தைகளுக்கு பத்தாயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குவிண்டால் நெல்லுக்கு 3000 ரூபாய், ஒரு டன் கரும்புக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும். பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி ரத்து செய்யப்படும். இதனால் லிட்டருக்கு 20 ரூபாய் வரை விலை குறையும் என அறிவித்துள்ளது.