தமிழகத்தில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ஆண்கள் 3.06 கோடி, பெண்கள் 3. 15 கோடி, மூன்றாம் பாலினத்தவர் 8,465 பேரும் வாக்களிக்க தகுதியுடையவர்கள். தமிழ்நாட்டில் 64,144 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது சுமார் 7 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணியாற்ற உள்ளனர். இதுவரை 70 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.