நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் பத்திரிக்கையாளர் மன்றத்தில் அறிவித்த அவர், இந்திய தேர்தல் ஆணையம் தங்கள் கட்சிக்கு ஒதுக்கிய மைக் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். சின்னம் விவகாரத்தில் எந்த பின்னடைவும் இல்லை.

சின்னத்திற்காக கடைசி நொடி வரை போராடினோம். ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டேன். நல்ல அரசியலை அமைக்க வேண்டும் என நினைக்கிறேன். முந்தைய தேர்தல்களில் போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது .