தேர்தல் பரப்புரையின் போது குழந்தைக்கு ஓபிஎஸ் பணம் கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாஜக கூட்டணியில் சுயேச்சை சின்னத்தில் களமிறங்கியுள்ள ஓபிஎஸ், பரமக்குடி பகுதியில் இன்று காலை தேர்தல் பரப்புரையை தொடங்கினார். சாலையில் வாக்கு சேகரித்துச் சென்ற அவர் பணியார கடையில் அமர்ந்து பணியாரம் சாப்பிட்டார். அப்போது அருகில் இருந்த தொண்டர் ஒருவரின் குழந்தையை தூக்கி ஓபிஎஸ் குழந்தைக்கு பணம் கொடுத்தார். இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.