ரோமியோ பட வெளியீடு தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, வரும் மக்களவைத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். அவர், மக்கள் அனைவரும் கட்டாயமாக வாக்கு செலுத்த வேண்டும்.

நமக்கு பிடித்தவர்களுக்கு வாக்கு செலுத்துவதை விட நாட்டுக்கு என்ன செய்தார்கள் என்று அறிந்து வாக்கு செலுத்த வேண்டும். ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்கிறார்கள், ஐந்து நிமிடம் யோசித்துப் பார்த்து வாக்கு செலுத்துங்கள். நோட்டாவுக்கு வாக்கு செலுத்தாதீர்கள், எதிர்காலம் நல்லா இருக்கும் என்று தெரிவித்துள்ளார்