திருவண்ணாமலையில் அடுத்தடுத்து இரண்டு கோர விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்தூர் அருகே முன்னாள் சென்ற டிராக்டர் மீது கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் திருமணத்திற்காக ஆந்திராவிலிருந்து சென்ற நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதனைப் போலவே திருமண நிகழ்ச்சிக்கு பைக்கில் சென்ற திருவண்ணாமலையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி உயிரிழந்தனர்.